اَلسَّـلاَمُ عَلَيْـكُمْ وَرَحْمَـةُ اللهِ وَبَـرَكَـاتُـهُ - அஸ்ஸலாமு அலை(க்)கும் வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு...

வெள்ளி, 5 ஜூன், 2015

9-ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! (படங்கள்)

பரங்கிப்பேட்டை மீராப்பள்ளியுடன் இணைந்த அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யாவின் 9ம் ஆண்டு ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா கடந்த திங்கள் அன்று காலை மீராப்பள்ளியில், அதன் நிர்வாகி கலிமா ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் தலைமையில் நடைப்பெற்றது. 

இதில் முஹம்மது முபாரக் அலி (மேலப்பாளைம்), உமர் ஃபாருக்  (பொதக்குடி) மற்றும் முஹம்மது அஷ்ரஃப் அலி (கடலூர்) ஆகிய மூன்று மாணவர்கள் ஹாஃபிழ் பட்டம் பெற்றனர். இவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பட்டங்கள், தங்க பதக்கங்கள் மற்றும் பரிசுகளை வழங்கினர்.

இந்நிகழ்ச்சிக்கு பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவரும் கடலூர் மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான எம்.எஸ் முஹம்மது யூனுஸ், ஜக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் எம். ஹமீது அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகளான எஸ். அலி அக்பர் மற்றும் ஜி.எம். நெய்னா மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அப்துஸ்மது ரஸாதி கிராஅத் ஓதி துவக்கி வைத்தர்.

அதனைத் தொடர்ந்து வரவேற்புரையுடன ஆண்டறிக்கை வாசிக்கபடப்டது. மாணவர்களுக்கு பட்டம் (ஸனது) மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.  முன்னதாக மாணவர்களை வாழ்த்தி ஆலிம் பெருமக்கள் உரையாற்றினார்கள். 

விழா நிகழ்வை எம். முஹம்மது ஷேக் ஆதம் மழாஹிரி தொகுத்து வழங்கினார். விழா நிறைவில் கலிமா பள்ளிவாசல் முத்தவல்லி பஷீர் அஹமது நன்றியுரை வழங்கினார். 

இந்நிகழச்சிக்கு வெளியூரிலிந்து மதரஸா மாணவர்களின் குடும்பத்தினர் கலந்துக் கொண்டனர். பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டடிருந்தது.







படங்கள்: ஷேக் ஆதம் மழாஹிரி

Seja o primeiro a comentar

  ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO