اَلسَّـلاَمُ عَلَيْـكُمْ وَرَحْمَـةُ اللهِ وَبَـرَكَـاتُـهُ - அஸ்ஸலாமு அலை(க்)கும் வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு...
ஆண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 23 நவம்பர், 2011

K-Tic: குவைத்தில் முப்பெரும் விழா! அரசு விருந்தினராக சூளைமேடு அப்துல்லாஹ் பாகவீ பங்கேற்பு!!

குவைத்தில் முப்பெரும் விழா!
குவைத் அரசு சிறப்பு விருந்தினராக சென்னை, சூளைமேடு மவ்லானா அப்துல்லாஹ் பாகவீ பங்கேற்பு!!
குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு!!
-------------------------------------------------
ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி!
கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி!!
சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி!!!
பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம..
கடந்த ஆறு வருடங்களுக்கும் முன் ஹிஜ்ரீ 1427 / இஸ்லாமியப் புத்தாண்டு துவங்கும் முஹர்ரம் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குவைத் இந்திய தூதரகம், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம், மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு, குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம், கல்வி என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும், ஸுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் குவைத்தில் இயங்கும் ஒரே சிறந்த பேரியக்கமான K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், ஒவ்வொரு ஆண்டும் சங்கத்தின் துவக்க நிகழ்ச்சியை ஹிஜ்ரா நிகழ்ச்சியுடன் சேர்த்து கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியையும் இணைத்துமுப்பெரும் விழாவாக நடத்திக் கொண்டு வருகின்றது.
அந்த அடிப்படையில் 'குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)'ஏற்பாடு செய்யும் (1) ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சி (2) கல்வி / சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி (3) சங்கத்தின் 7ம் ஆண்டு துவக்க நிகழ்ச்சி ஆகிய 'முப்பெரும் விழா', நான்கு நாட்கள் மூன்று இடங்களில் ஐந்து நிகழ்ச்சிகளாக குவைத் அவ்காஃப்/ இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகத்தின் ஆதரவில் நடைபெற இருக்கின்றன இன்ஷா அல்லாஹ்...
சங்கத்தின் தலைவர் விஸ்வகுடி மவ்லவீ அஷ்ஷைஃக் எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் அவர்கள் தலைமையில் நடைபெறும் இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் தமிழகத்திலிருந்து வருகை தரும் மலேஷியா, கோலாலம்பூர் மஸ்ஜிதே இந்தியாவின் முன்னாள் இமாமும், பன்னூல் ஆசிரியரும், ீரிய சிந்தனையாளருமான சென்னை, சூளைமேடு மவ்லானா மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அஷ்-ஷைஃக் ேராசிரியர் மு. அப்துல்லாஹ் ஃபாஜில் பாகவீ ஹழ்ரத் கிப்லா அவர்கள் குவைத் அவ்காஃப்/ இஸ்லாமி விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்ற இருக்கின்றார்கள்.
முதல் நிகழ்ச்சி:
01.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் 'ஹிஜ்ரா - முழுமையான வரலாறும், படிப்பினைகளும், பாடங்களும்....' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் நிகழ்ச்சி:
02.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'ஜகாத் - நோக்கங்களும், தற்கால நடைமுறைகளும், பைத்துல் மாலின் (பொது நிதி கருவூலம்) முக்கியத்துவமும்...' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.
மூன்றாம் நிகழ்ச்சி:
02.12.2011 வெள்ளிக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (KPTC பேரூந்து நிலையம் / லிபரேஷன் டவர் அருகில், சூக்குல் வதனிய்யா எதிரில் உள்ள)' பள்ளிவாசலில் 'கல்வியும், ஒழுக்கம் சார்ந்த நெறிகளும், மார்க்கக் கல்வியின் முக்கியத்துவமும்....' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி கல்வி / சமூக விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்காம் நிகழ்ச்சி:
08.12.2011 வியாழக்கிழமை இரவு 6:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'முன்மாதிரி முஸ்லிம் குடும்பம் - இஸ்லாமியக் குடும்பவியல்' என்ற தலைப்பில் ிறப்புரை நடைபெறும். இந் நிகழ்ச்சி பெண்களுக்கான சிறப்பு நிகழ்ச்சியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஐந்தாம் நிகழ்ச்சி:
09.12.2011 வெள்ளிக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து குவைத், ஃகைத்தான் பகுதியிலுள்ள K-Tic தமிழ் ஜும்ஆ ஃகுத்பா பள்ளிவாசலான அல் மிக்தாத் பின் அம்ரூ (ரழி) பள்ளிவாசலில் 'உளத்தூய்மை, மரண சிந்தனை, மண்ணறை வாழ்க்கை, மறுமை வெற்றி' என்ற தலைப்பில் சிறப்புரை நடைபெறும்.
இந்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனைத்திலும் குவைத் வாழ் தமிழ் உலம பெருமக்கள், பேராசிரியர்கள் ற்றும் பிற அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாழ்த்துரைகளையும், சிற்றுரைகளையும் வழங்க இருக்கின்றனர். துஆவுடன் அனைத்து நிகழ்ச்சிகளும் இனிதே நிறைவுபெறும் இன்ஷா அல்லாஹ்.
இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் குவைத் வாழ் தமிழ் முஸ்லிம்கள் அனைவரும் தங்கள் குடும்பத்தார், மனைவி, மக்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பிற சமய சகோதரர்கள் அனைவருடனும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் ெய்து கொண்டிருக்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் மற்றும் ளப்பணியாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.
குறிப்பு:
  • நிகழ்ச்சிகள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டு, குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கப்படும்.
  • அனைத்து நிகழ்ச்சிகளிலும் பெண்களுக்கு தனியிட வசதி உண்டு.
  • 08.12.2011 வியாழக்கிழமை அன்று நடைபெறும் நிகழ்ச்சியில் மட்டும் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • தொடர்ந்து நமது சங்கத்திற்கு ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும், நமது செய்திகளை தொடர்ந்து வெளியிடும் இணையதளங்கள், இதழ்கள், வலைப்பூக்கள், தொலைக்காட்சிகள் மற்றம் ஊடகங்கள் ஆகியவற்றின் நிர்வாகிகளுக்கும்,ஆசிரியர் குழுவினருக்கும் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதுடன் தொடர்ந்து எங்களின் சேவைகளை செய்திகளாக மக்களிடம் சேர்ப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றனர் சங்கத்தின் நிர்வாகிகள்.
  • குவைத்திற்கு வெளியே வாழும் சகோதரர்கள் குவைத்தில் வசிக்கும் தங்களுக்கு தெரிந்தவர்களிடம் இந்தச் செய்தியை எத்தி வைக்குமாறும், நம் சங்கத்தின் பணிகள் மென்மேலும் விரிவடைய தங்களின் இருகரமேந்திய பிரார்ததனைகளை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர் K-Tic சங்க நிர்வாகிகள்.
அனைவரும் குடும்பத்துடன் வருக! அன்பர்களையும் அழைத்து வருக!! அளவிலா அறிவமுதம் பெ(ப)ருக!!!
உலக மக்கள் அனைவருக்கும் K-Ticன் இதயங்கனிந்த ஹிஜ்ரீ 1433 / இஸ்லாமியப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!
மேலதிக விபரங்களுக்கும், இணைந்து செயல்படுவதற்கும் தொடர்பு கொள்க:
துரித சேவை அலைபேசி எண்: (+965) 97 87 24 82
மின்னஞ்சல் முகவரிகள்: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com
யாஹு குழுமம்: http: //groups.yahoo.com/group/K-Tic-group
இணையதளம்: www.k-tic.com

வியாழன், 17 ஜூன், 2010

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் 5ஆம் ஆண்டு துவக்க விழா! புதிய நிர்வாகிகள் தேர்வு!!

கடந்த 11.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப் B.A அப்துர் ரஜ்ஜாக் அவர்களின் இல்லத்தில் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் '5ஆம் ஆண்டு துவக்க விழா'வும், '2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு'ம் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்...

பேரவையின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் S. முஹம்மது நூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவையின் தலைவர் ஜனாப் J. ஹஸன் அலீ மற்றும் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் இறைவசனங்கள் (கிராஅத்) ஓத நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

தலைவரின் தலைமையுரைக்கு பின், செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். துணைச்செயலாளர் ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால் பேரவையின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். பொருளாளர் ஹாஜி M.S குலாம் ஜெய்லானி மியான் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.

4ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5ம் ஆண்டு துவக்கம் குறித்து உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு 2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கீழ்க்காணும் சகோதரர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழு

தலைவர் :ஹாஜி M.S. குலாம் ஜெய்லானி மியான்

கௌரவ தலைவர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ துணைத் தலைவர்கள் : 1. ஜனாப் S. முஹம்மது நூர் 2. ஜனாப் K. முஹம்மது இப்ராஹீம் (ஃபதஹ் நானா)

செயலாளர்: ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால்

இணைச்செயலாளர் : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் துணைச்செயலாளர்கள் : ஜனாப் U. நிஸார் அஹ்மது 2. ஜனாப் S. ஸலாஹுத்தீன்

பொருளாளர் : ஜனாப் S. கவுஸ் அலீ

துணைப் பொருளாளர் : ஜனாப் B.A. அப்துர் ரஜ்ஜாக்

ஊடகத்துறை பொறுப்பாளர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

மக்கள் தொடர்பு : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப்
ஆலோசனைக் குழு

தலைவர் : ஜனாப் J. ஹஸன் அலீ

உறுப்பினர்கள்: 1. ஜனாப் Z. ஹபீபுல்லாஹ் மரைக்காயர் 2. ஜனாப் B. முஹம்மது ஷரீஃப் 3. ஜனாப் A.B. அப்துல் நஜீர் 4. ஜனாப் M.H. அல்காஃப் ஹுஸைன் 5. ஜனாப் K. ஜாகிர் ஹுஸைன்

செயற்குழு

தலைவர் : ஜனாப் N. வஜ்ஹுத்தீன்
உறுப்பினர்கள் : 1. ஜனாப் S. இமாம் கஜ்ஜாலி 2. ஜனாப் M.H. உஜைர் 3. ஜனாப் I. முஸ்தஃபா 4. ஜனாப் S. ஷர்ஃபுத்தீன் 5. ஜனாப் S.A. பீர் முஹம்மது
புதிய பொருளாளர் ஜனாப் S. கவுஸ் அலீ நன்றியுரையாற்ற, கௌரவ தலைவரின் துஆவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு தங்கள் வருகையை பதிவுசெய்து சிறப்பித்ததுடன் நகர வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்குஉதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

மேலதிக செய்திகளுக்கும், பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை அனுப்புவதற்கும் kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும், குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பேரவையின் குழுமத்தில் இணைந்திடுமாறும் பேரவையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : ஊடகத் துறை, குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA), குவைத்

அலைபேசி எண்கள்:(+965) 66 36 26 47 / 97 87 24 82 / 66 64 14 34 / 67 78 97 84 மின்னஞ்சல்கள் : kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com குழுமம் : http://groups.google.com/group/kpia
KPIA பேரவையின் செயற்திட்டங்கள்

அ) பரங்கிப்பேட்டைக்கான சேவைகள்:

1. கல்வி உதவி (உயர் கல்வி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி)!

2. கத்னா (சுன்னத்) செய்ய உதவி! 3. ஜனாஸா அடக்கம் செய்ய உதவி! 4. ஆதவற்ற குடும்பங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முறையில் தொழில் தொடங்க உதவி! 5. வருமானமில்லா பள்ளிவாசல்களில் ரமழான் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி! 6. ஜகாத் (ஏழைவரி), ஸதகத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) மற்றும் ஸதகா (தர்மம்) போன்றவற்றை இங்கு வசூலித்து ஊரிலுள்ள தகுதியுள்ளோருக்கு விநியோகித்தல்! 7. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயன்றவரை உதவி செய்தல்! 8. மற்ற வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் நமதூர் அமைப்புகளுடன் இணைந்து வேலையில்லாத நமதூர் சகோதரர்களுக்கு வேலை பெற்று தர ஏற்பாடு செய்தல்! 9. நமதூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் நற்பணி அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம், கல்வி விழிப்புணர்வு முகாம், இலவச தண்ணீர் பந்தல், பேரூந்து & தொடர்வண்டி (இரயில்) கால அட்டவணை தகவல் பலகை, சாலையோரம் மரங்கள் நடுதல், கோடைகால பயிற்சி வகுப்பு, இலவச கம்ப்யூட்டர் கல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நமதூருக்குத் தேவையான அவசியமான அத்தியாவசியமான பணிகள் குறித்த கலந்தாய்வு போன்றவற்றை ஏற்பாடு செய்தல்!
ஆ) குவைத்திற்கான சேவைகள்:

1. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது!

2. ஊரிலிருந்து வரும் தபால்களை ஒப்படைப்பதற்கான உள்ளூர் தபால் சேவை! 3. ஆண்டுக்கொருமுறை பேரவை சார்பாக குவைத்திலிருந்து புனித உம்ரா பயணம் புறப்படுதல்! 4. உறுப்பினர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் ஏற்பாடு செய்தல்! 5. நமதூர் மக்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துதல்!

இன்னும் உண்டு பல நல்ல செயற்திட்டங்கள்...!

இன்ஷா அல்லாஹ்... அவற்றை செயல்படுத்த வேண்டும்..!! தங்களின் மேலான பிரார்த்தனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள்...!!!

  ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO