தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிடுவீர்!
பதிவு செய்தவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ காலம் 5/10/2011 03:17:00 PM 0 பின்னூட்டங்கள்
இடுகுறிகள் அழிவு, உதவி, ஏழை, தீ, நாசம், நெருப்பு, பரங்கிப்பேட்டை, விபத்து
Posts Relacionadosபதிவு செய்தவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ காலம் 2/23/2011 10:44:00 AM 0 பின்னூட்டங்கள்
இடுகுறிகள் உதவித் தொகை, கல்வி, தவ்லத் நிஸா, பரங்கிப்பேட்டை, பெண், மார்க்கம்
Posts Relacionadosபேரவையின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் S. முஹம்மது நூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவையின் தலைவர் ஜனாப் J. ஹஸன் அலீ மற்றும் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் இறைவசனங்கள் (கிராஅத்) ஓத நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.
தலைவரின் தலைமையுரைக்கு பின், செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். துணைச்செயலாளர் ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால் பேரவையின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். பொருளாளர் ஹாஜி M.S குலாம் ஜெய்லானி மியான் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.
4ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5ம் ஆண்டு துவக்கம் குறித்து உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு 2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கீழ்க்காணும் சகோதரர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.
தலைவர் :ஹாஜி M.S. குலாம் ஜெய்லானி மியான்
கௌரவ தலைவர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ துணைத் தலைவர்கள் : 1. ஜனாப் S. முஹம்மது நூர் 2. ஜனாப் K. முஹம்மது இப்ராஹீம் (ஃபதஹ் நானா)செயலாளர்: ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால்
இணைச்செயலாளர் : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் துணைச்செயலாளர்கள் : ஜனாப் U. நிஸார் அஹ்மது 2. ஜனாப் S. ஸலாஹுத்தீன்பொருளாளர் : ஜனாப் S. கவுஸ் அலீ
துணைப் பொருளாளர் : ஜனாப் B.A. அப்துர் ரஜ்ஜாக்ஊடகத்துறை பொறுப்பாளர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ
மக்கள் தொடர்பு : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப்தலைவர் : ஜனாப் J. ஹஸன் அலீ
செயற்குழு
புதிய பொருளாளர் ஜனாப் S. கவுஸ் அலீ நன்றியுரையாற்ற, கௌரவ தலைவரின் துஆவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு தங்கள் வருகையை பதிவுசெய்து சிறப்பித்ததுடன் நகர வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்குஉதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.
மேலதிக செய்திகளுக்கும், பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை அனுப்புவதற்கும் kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும், குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பேரவையின் குழுமத்தில் இணைந்திடுமாறும் பேரவையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.செய்தி : ஊடகத் துறை, குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA), குவைத்
அலைபேசி எண்கள்:(+965) 66 36 26 47 / 97 87 24 82 / 66 64 14 34 / 67 78 97 84 மின்னஞ்சல்கள் : kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com குழுமம் : http://groups.google.com/group/kpiaஅ) பரங்கிப்பேட்டைக்கான சேவைகள்:
1. கல்வி உதவி (உயர் கல்வி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி)!
2. கத்னா (சுன்னத்) செய்ய உதவி! 3. ஜனாஸா அடக்கம் செய்ய உதவி! 4. ஆதவற்ற குடும்பங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முறையில் தொழில் தொடங்க உதவி! 5. வருமானமில்லா பள்ளிவாசல்களில் ரமழான் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி! 6. ஜகாத் (ஏழைவரி), ஸதகத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) மற்றும் ஸதகா (தர்மம்) போன்றவற்றை இங்கு வசூலித்து ஊரிலுள்ள தகுதியுள்ளோருக்கு விநியோகித்தல்! 7. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயன்றவரை உதவி செய்தல்! 8. மற்ற வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் நமதூர் அமைப்புகளுடன் இணைந்து வேலையில்லாத நமதூர் சகோதரர்களுக்கு வேலை பெற்று தர ஏற்பாடு செய்தல்! 9. நமதூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் நற்பணி அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம், கல்வி விழிப்புணர்வு முகாம், இலவச தண்ணீர் பந்தல், பேரூந்து & தொடர்வண்டி (இரயில்) கால அட்டவணை தகவல் பலகை, சாலையோரம் மரங்கள் நடுதல், கோடைகால பயிற்சி வகுப்பு, இலவச கம்ப்யூட்டர் கல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நமதூருக்குத் தேவையான அவசியமான அத்தியாவசியமான பணிகள் குறித்த கலந்தாய்வு போன்றவற்றை ஏற்பாடு செய்தல்!
ஆ) குவைத்திற்கான சேவைகள்:
1. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது!
2. ஊரிலிருந்து வரும் தபால்களை ஒப்படைப்பதற்கான உள்ளூர் தபால் சேவை! 3. ஆண்டுக்கொருமுறை பேரவை சார்பாக குவைத்திலிருந்து புனித உம்ரா பயணம் புறப்படுதல்! 4. உறுப்பினர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் ஏற்பாடு செய்தல்! 5. நமதூர் மக்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துதல்!இன்னும் உண்டு பல நல்ல செயற்திட்டங்கள்...!
இன்ஷா அல்லாஹ்... அவற்றை செயல்படுத்த வேண்டும்..!! தங்களின் மேலான பிரார்த்தனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள்...!!!
பதிவு செய்தவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ காலம் 6/17/2010 01:11:00 PM 0 பின்னூட்டங்கள்
இடுகுறிகள் ஆண்டு, குவைத், துவக்க விழா, தேர்வு, நிர்வாகிகள், பரங்கிப்பேட்டை, பேரவை
Posts Relacionados
அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் போட்டிகளில் பங்குபெறும மாணவச் செல்வங்களின் திறமைகளை நேரில் காணவும், ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு துஆ செய்யவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.
இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.
தொடர்புக்கு:
பதிவு செய்தவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ காலம் 6/09/2010 11:48:00 AM 0 பின்னூட்டங்கள்
இடுகுறிகள் கிராஅத், பட்டமளிப்பு, பரங்கிப்பேட்டை, போட்டி, முப்பெரும் விழா, ஹாஃபிழ்
Posts Relacionados
பதிவு செய்தவர் பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ காலம் 5/20/2010 02:40:00 PM 0 பின்னூட்டங்கள்
இடுகுறிகள் அரங்கம், கடலூர், காரீ, கிராஅத், பரங்கிப்பேட்டை, போட்டி, மஹ்மூதிய்யா, ஹிஃப்ழு
Posts Relacionados©Template Blogger Green by Dicas Blogger.